×

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் சப்பர விழா

நாகப்பட்டினம்,மே8: திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயில் தெருவடைத்தான் சப்பரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடியில் புகழ் பெற்ற உத்தராபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தெருவை அடைத்து கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று அழைக்கப்படுகிறது.

சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

 

The post திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் சப்பர விழா appeared first on Dinakaran.

Tags : Sappara ,Thiruchengattangudi Uttarapadeeswarar Temple ,Thirumarukal ,Nagapattinam ,Thiruchengatangudi Uttarapadeeswarar temple ,Uttarapadeeswarar Temple ,Tiruchengatangudi ,Tirumarukal ,Chitrai Bharani festival ,Sappara festival ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்